Wednesday, July 21, 2010

முன்னாள் உலக அழகியும் பிரபல இயக்குனரும்

”அம்மா... உங்க கிட்ட கதை சொல்லனும்னு ஒரு டைரக்டர் வந்திருக்காரும்மா...” - அந்த முன்னால் உலக அழகியின் வேலைக்காரன் பவ்வியமாக சொன்னான்.

“எந்த டைரக்டர்... என்ன பேர் சொன்னாரு...”

“காலைலயிருந்து 10 மிஸ்டு கால் கொடுத்திட்டு உங்க போனுக்காக காத்திட்டு இருந்தாராம்”.

”ஓ... அவரா.. அந்த ஆளுக்கு வேர வேலயில்ல அவரு கொழந்தயா இருக்கும் போது அவங்க பாட்டி சொன்ன கதைய எல்லாம் இப்ப படமா எடுத்திட்டு இருக்காரு... அம்மா அடுப்பாங்கரையிலே வேலயாயிருக்காங்க அப்புறமா வாங்கன்னு சொல்லுறதுதானே...”

”சொன்னேம்மா...அடுப்பாங்கரைக்கே வரேன்னாரு அதான் வராண்டவுல உக்கார வச்சிட்டு வந்திருக்கேன்.”

“சரி வர்ரேன்னு சொல்லு”

”வணக்கம் சார் என்ன வ்ஷயம்”

"ஒரு சூப்பரான கதை வ்ச்சிருக்கேன்... உன் கிட்ட சொல்லி ஒரு வருஷத்துக்கு கால்ஷீட் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்...உங்க வீட்டுகாரர் தான் ஹீரோ.”

[ஐயோ... மறுபடியும் நாங்க மாட்னோமா...]

கதையில ஹீரோயின்... அதாவது நீங்க ராஜஸ்த்தான்ல ஒட்டக வியபாரியோட பொண்னா வரீங்க... ஷூட்டிங் முழுக்க முழுக்க பாலைவனத்துல தான் நடக்குது... நாம ஒரு வருஷம் பாலைவனத்துல டெண்ட் போட்டு அங்கேயே தங்குறோம்.

[போச்சு... என்ன ஒரு வழி பண்ணாம இந்த ஆள் விடமாட்டான் போலயிருக்கு... ]

ஹீரோ... அதான் உங்க வீட்டுகாரர் ராஜஸ்த்தான்ல ஒட்டக மேய்ச்சிட்டு இருக்காரு...உங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்துறது... உங்க வீட்லயும் சம்மதிச்சு ஒரு ஜோடி ஒட்டகத்த சீதனமா குடுத்து உங்கப்பா கல்யாணம் பண்ணி வக்கீராரு.

அப்படியே கொஞச நாள் உங்க லைப் ஜாலியா போயிட்டு இருக்கு...

ஒட்டகம் மேய்க்க போன உங்க வீட்டுகாரர் அங்க ஒட்டகம் மேய்க்க வந்த ஒருத்தியோடு சேந்து அவளோடவே செட்டில் ஆயிடுராரு....”இந்த ஒட்டகம் மேய்க்கரவ ரோலுக்கு

ஷாகிராவ போடலாம்னு இருக்கேன்...”


[மவனே உனக்கு நேரம் சரியில்லன்னு நெனைக்கிறேன்... பெரிய எடத்துல எல்லாம் கைவககிற.]

இப்படியே அவங்க ஒன்னா ஒட்டகம் மேய்ச்சிட்டு ஜாலியா இருக்க சொல்ல....ஃபுட் பால் மேட்ச்ல டேன்ஸ் ஆடுறதுக்கு சான்ஸ் கிடைக்கவே உங்க வீட்டுகார்ர டீல்ல விட்டுட்டு அந்தம்மா சவுத் ஆப்ரிக்கா போயிடுறாங்க.

திருந்தி வந்த உங்க வீட்டுகார்ர நீங்களும் மன்னிச்சி ஏத்துகிட்டு... புதுசா ஏதாவது வியாபாரம் பாக்கலாம்னு உங்க கிட்ட இருக்கிற ரெண்டு ஒட்டகத்தில ஆம்பிள ஒட்டகத்தை வித்துட்டு வர சொல்லி உங்க வீட்டுகார்ர அனுப்பிறீங்க...

ஒட்டகம் விக்க போனவர... ராஜாவோட ஒட்டகத்தை திருடிட்டாருன்னு சொல்லி அவருக்கு மரண தண்டனை கொடுத்திர்றாங்க. விஷயம் கேள்விப்பட்டு நீங்க உங்க கிட்ட இருக்கிற பொம்பள ஒட்டகத்த கூட்டிட்டு அரண்மனைக்கு நியாயம் கேக்க போறீங்க

ராஜாகிட்ட அந்த ஆண் ஒட்டகம் உங்களோடது தான்னும் அதோட ஜோடி இதான்னும் வாதாடுறீங்க... ”ராஜா வேஷத்துக்கு உங்க மாமனார்கிட்ட நீங்கதான் கால்ஷீட் வாங்கி தரனும்.”

[இது வேறயா...மொதல்ல இந்த ஆள் கண்ல படாம எங்கயாவது போகனும்]

ராஜாவும் அவர்கிட்டயும் ஒரு பெண் ஒட்டகம் இருக்குன்னும் அதான் அந்த ஆண் ஒட்டகத்தோட ஜோடின்னும் சொல்றாரு.

மந்திரிங்க எல்லாம் ஒன்னா சேந்து ஒரு ஐடியா தராங்க.... அதாவது ரெண்டு பொம்பள ஒட்டகத்தையும் தூர தூர நிக்க வைக்கனும்.... எந்த ஒட்டகத்து கிட்ட ஆம்பிள ஒட்டகம் போகுதோ அதான் அதோட ஜோடின்னு முடிவு ப்ண்றாங்க.

ஆண் ஒட்டகம் உங்களோட பொம்பள ஒட்டகத்து கிட்ட வரவே நீங்க ரொம்ப கோபமாகி சாபம் விட்டு அந்த பாலைவனத்தையே சுனாமியால அழிச்சிறீங்க.

[பாலைவனத்துல சுனாமியா.... அடப்பாவி மனுஷா...]

கதைல ட்விஸ்ட் என்னன்னா.... உங்க வீட்டுகாரர் சரக்கடிகிறதுக்காக அவர் கொண்டு போன ஒட்டகத்தை வித்துட்டு ராஜாவோட ஒட்டகத்த திருடிட்டுதான் வந்திருப்பாரு இத நாம் ஃப்ளாஷ் பேக்ல காட்றோம். அப்புறம் ஏன் அந்த ஆண் ஒட்டகம் உங்க ஒட்டகத்து கிட்ட வந்ததுன்னு கேக்குறீங்களா...

[நான் எதுவும் கேக்குற மாதிரியில்ல]

ஒரே ஜோடியோட இருக்கிறது அதுக்கு போரடிக்கவே தான் அது உங்க ஒட்டகத்து கிட்ட வந்தது. இந்த உண்மை அந்த மூனு ஒட்டகத்துக்கு மட்டும் தான் தெரியும்.

இந்த படத்தை நான் ஹிந்தி தமிழ் ரெண்டுலயும் ஒரே நேரத்துல எடுக்கிறேன்.... படத்தோட டைட்டில் என்னன்னு கேக்கலியே.... தமிழ்ல ”கோவலன்” ஹிந்தியில ”கோவன்” இன்ஃபேக்ட் ஒரு சீன்ல ஹீரோ வெறும் கோவனத்தோட நடிக்கனும்.

”கிழிஞ்சது...”

”இல்ல புதுசுதான்”

அப்ப நான் கிளம்புறேன்.... உங்க வீட்டுகாரர் கிட்டயும் ஒரு வருஷத்துக்கு கால்ஷீட் வாங்கி வச்சிடுங்கோ. பை....

”ஹலோ...டார்லிங் அந்த டைரக்டர் டார்ச்சர் தாங்க முடியல....எங்கயாவது வெளிநாட்ல ஒரு வருஷம் இருந்துட்டு வரும்போது புள்ள பெத்துட்டு வரலம்னு சொன்னீங்களே எப்ப போலாம்...

Sunday, June 27, 2010

கல்யாண ரிசப்ஷன்

கல்யாண ரிப்னுக்கு சீக்கிரமா போனா ஒரு அனுபவம், லேட்டா போனா வேற அனுபவம். போன வாரம் தொடர்ந்தாப்போல ரெண்டு கல்யாண ரிப்ஷனுக்கு போக வேண்டியிருந்தது. மொத நாள் கல்யாண ரிப்னுக்கு குடும்பத்தோட மாலை 7 மணிக்கெல்லாம் ரிப்னுக்கு போயிட்டேன் மாப்பிள்ளையும் பொண்ணும் லேட்டா வந்ததால அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்னிசை என்ற பேர்ல காதை செவிடாக்கி கொண்டிருந்தார்கள்.
மாப்பிள்ளையும் பொண்ணும் வந்த பிறகு அவங்களை வாழ்த்துறதுக்கு ஒரு பெரிய க்யுல நின்னு அவங்களை வாழ்த்திட்டு சாப்பிட போனா அங்கேயும் ஒரு க்யு. சரி வெய்ட் பண்ணி இடத்த பிடிச்சி சாப்பிட உட்கார்ந்தா அடுத்த பந்திக்கு காத்திருக்கிற ஆள் என் சேருக்கு பின்னே நின்னுட்டு எப்ப எழுந்திருப்பேன்னு நான் சாப்பிடறதயே பாத்திட்டு இருக்காரு. வேகமா சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து வந்தேன் இல்லேன்னா பின்னாடி நின்னு பாத்திட்டுருந்த ஆள் சாப்பிட்டது போதும் சீக்கிரம் எழுந்துருங்கன்னு சொன்னாலும் சொல்லியிருப்பார்.

சீக்கிரமா போனா இப்படி இருக்கேன்னு மறு நாள் போன
கல்யாண ரிப்னுக்கு லேட்டா 9 மணிக்கு போனேன். கூட்டம் இல்லாமல் இருந்தது, எப்படி என் புத்திசாலிதனம்னு பொண்டாட்டிய ஒரு பார்வை பாத்திட்டு ரிலாக்ஸ்டா மணமக்களை வாழ்த்திட்டு சாப்பிட போனா வெறும் சாம்பார் சாதமும் தயிர் சாதம் மட்டும் இருந்தது மற்ற அயிட்ட்மெல்லாம் காலியாயிடுச்சாம். என் பொண்டாட்டி என்ன ஒரு பார்வை பாத்தா பாருங்க.... இப்பல்லாம் கல்யாண ரிப்னுக்கு போகிறதுக்கு ரொம்ப டென்ஷனாயிருக்கு.

Sunday, May 2, 2010

குடிச்சிட்டு லாரி ஓட்டிய நாய்

சென்னை ரெட் ஹில்ஸ்லருந்து அம்பத்தூர் வரைக்கும் ஒரு லாரி ட்ரைவர் குடிச்சிட்டு 10 கிமீ தூரம் லாரி ஓட்டிட்டு வந்திருக்கான். வர்ர வழியெல்லாம் ஆளுங்க மேல வண்டிய ஏத்தியிருக்கான் மொத்தம் 15 பேர் மேல வண்டிய ஏத்தியிருக்கான், இதுல ஒருத்தர் பலியாகியிருக்கார் அவருக்கு 37 வயசுதான் அகுதாம். அவரோட மனைவி குழந்தைகளோட நிலமைய நினச்சா ரொம்ப கஷ்டமாயிருக்கு. இது போல குடிச்சிட்டு வண்டி ஓட்ற நாய்கள என்ன பண்ணலாம்?

சும்மா பைக்ல போறவங்கள குடிச்சிட்டு வண்டி ஓட்றாங்களான்னு செக் பண்றாங்க போலீஸ்காரங்க ஆனா TASMAC (Wine Shop) க்கு குடிக்க வர்ரவங்க நடந்தா வர்ராங்க? பைக்ல, லாரில, வேன்ல வந்து தான் குடிக்கிறாங்க. ஒரு நாள் ஸ்கூல் பஸ் ஓட்டிட்டு வந்த ட்ரைவர் பஸ்ஸ TASMAC பக்கத்துல நிறுத்திட்டு குடிச்சிட்டு போனான். அந்த பஸ்ல போற குழந்தைகள நினச்சி பாத்தா பயமா இருக்கு. போலீஸ்ல சொன்னா அவங்களுக்கு வருமானம் கிடைக்குமே ஒழிய நமக்கு ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. நிஜமாவே குடிச்சிட்டு வண்டி ஒட்டுறவங்கள பிடிக்கனும்னா TASMAC பக்கத்துல போலீஸ்காரங்க நின்னு செக் பண்ணனும். அப்படி பண்ணா வியாபாரம் பாதிக்குமே...என்ன செய்றது ஒன்னும் புரியல.

Sunday, April 25, 2010

மக்கள் உயிரை வாங்கும் லஞ்சம்

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீட்ல் இருந்து 1800 கோடி ரூபா லஞ்ச பணமும் 1500 கிலோ தங்கமும் சிபிஐ அதிகாரிங்க பறிமுதல் செஞ்சிருக்காங்க. மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்க permission கொடுக்கிறதுக்கு லஞ்சம் வாங்கியிருக்கான். நம்ம வாழ்நாள்ல ஒரு கோடி ரூபாய கண்ணால பாக்க முடியுமான்னு தெரியல. 1800 கோடி ரூபாய்.... ஒரு கோடிக்கு எத்தனை சைபர் 10000000 சரியா? அப்ப 18000000000 ரூபாய். 1500 கிலோ தங்கம், 1 கிராம் 1500 ரூபாய்ன்னா 1 கிலோ... 1500000 ரூபாய்... 1500 கிலோ 2250000000 ரூபாய். தல சுத்துது. ரொக்கமாவே இவ்வளவு பணத்தையும், தங்கத்தையும் வச்சிருக்கான் லஞ்சத்துல வாங்குன சொத்து எவ்வளவு இருக்கோ...

இது மாதிரி லஞ்சம் கொடுத்து மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சவனுங்க மெரிட்லயா சீட்டு தருவானுங்க? பணத்தை வாங்கிட்டு தகுதி இல்லாதவனுக்கெல்லாம் சீட்டு தருவானுங்க. பணத்த குடுத்து சீட்டு வாங்கிறவனுக்கு எப்படி பாஸ் பண்ணனும்னு தெரியாதா? இது மாதிரி டாக்டரா ஆறவனுங்க என்ன பண்ணுவானுஙக.... படிக்க குடுத்த பணத்த நம்ம கிட்டருந்து புடுங்றதோட நம்ம உயிரையும் சேத்து எடுப்பானுங்க. எப்படியும் இந்த சமுகத்தில நடக்குற எல்லா தப்புலயும் கடசில ஆப்பு நமக்கு தான்.

என்னோட அனுபவத்த சொல்றேன் கேளுங்க...கொஞ்ச நாளா எனக்கு acidity ப்ராப்ளம் இருந்தது. போன மாசம் ஒரு டாக்டர பாத்தேன். என்னோட ப்ராப்ளத்த கேட்ட அந்த டாக்டர் என்ன தொட்டு கூட பாக்கலீங்க... எந்த மருந்தும் எழுதல நாளக்கி காலைல எதுவும் சாப்பிடாம வாங்க endoscope செஞ்சி பாத்துடலாம்னு மட்டும் சொன்னாரு. மொத்தமா அந்த ரூம்ல ஒரு நிமிஷம் கூட இருந்திருக்க மாட்டேன். வெறும endoscope செஞ்சி பாத்துடலாம்னு சொன்னதுக்கு 500 ரூபாய் fees வாங்கிட்டாரு. ஒரு செருப்பு தைக்கிற தொழிலாளி நம்ம செருப்ப தெச்சி குடுத்திட்டு 5 ரூபா கேட்டா தெச்ச செருப்ப நாலு தடவ இழுத்து பாத்துட்டு தான் 5 ரூபா கொடுப்போம்... அந்த 5 ரூபா குடுக்கிறதுக்கே மறுபடியும் அறுந்துடாதே... அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்வி கேப்போம் ஆனா டாக்டர்ங்க கிட்ட... அவங்க சரியான ட்ரீட்மெண்ட் தந்தாங்களா இல்லாயா... நியாயமான fees கேக்குறாங்களான்னு பாக்காம பணத்த கொடுக்கிறோம்

சரி விஷயத்துக்கு வர்ரேன் இவ்வளவு லஞசம் வாங்கின ஆள என்ன பண்ணலாம்? அந்நியன் படத்துல சொன்ன மாதிரி ஒரு ரூம்ல அவனையும் அந்த 1800 கோடி ரூபாயையும், 1500 கிலோ தங்கத்தையும் வச்சி பூட்டிடனும். அவன் அந்த பணத்தையும், தங்கத்தையும் தின்னுட்டு சாவனும்.

Wednesday, April 7, 2010

போலி மருந்து


காலாவதி ஆன மருந்து மற்றும் போலி மருந்து மூலம் கோடி கோடியா சம்பாரிச்ச கும்பல் ஒன்னு இப்ப போலிஸ்ல மாட்டி இருக்கு. போலிஸ்ல மாட்டின மீனாட்சி சுந்தரம் 20 வருஷமா இந்த வேலை செய்துட்டு வந்ததா சொல்றான்... இப்ப எப்படி மாட்டினானுங்கன்னு புரியல (தர வேண்டியத தரலையோ என்னவோ). மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிங்க எல்லாம் என்ன *** ###கிட்டு இருந்தாங்கன்னு தெரியல. நம்ம வரி பணத்தையெல்லாம் சம்பளமா குடுத்து இது போல தப்பு நடக்காம பாத்துக்க சொன்னா... போலி மருந்து பத்தி நாம எதாவது தகவல் கொடுத்தா சன்மானம் தரேன்னு சொல்றானுங்க மானங்கெட்டவனுங்க. நாம வாங்குற மருந்து போலியா ஒரிஜனாலான்னு நமக்கு பாக்க தெரிஞ்சா இவனுங்க எதுக்கு.

படிக்காத ஆட்கள் medical shop ல கொடுக்கிற மருந்த எதுவுமே பாக்காம வாங்கிட்டு போகும் போது... நான் என்னவோ பெரிசா படிச்ச பருப்பு போல Expiry date எல்லாம் பாத்து வாங்குவேன். ஆனா பழைய மருந்துக்கு புது லேபில் ஒட்டி ஏமாத்துவானுங்கன்னு நினைச்சுகூட பாக்கலை... மனுசங்க உயிரோட விளையாடுற போலி மருந்து கும்பலை மட்டும் கைது பண்ணா போதாது, கடமையை சரியா செய்யாத மற்றும் இதுக்கு துணையா இருந்த அதிகாரிகளையும் விடக்கூடாது.

Thursday, April 1, 2010

நாய் ஒன்னுக்கு போகும்போது...



நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட்மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒருசந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்துவச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?

நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும்அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும்போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம்அவசர வேலை இருக்கு அப்புறம்
பாக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.

இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானேமோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன்.
அது என்னன்னா...

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேலவிழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப்போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...

(ஹலோ இதுக்கெல்லாம அடிக்க வருவாங்க புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க இல்லைன்னா இதுக்கு மேல கடி வரும் உஷாரா இருங்க)

Saturday, March 20, 2010

பொண்ண பெத்தவன்

”ராஜாராமா... எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குடா...”

”அப்படியா...ரொம்ப சந்தோஷம்டா...”

”அட நீ வேற... நானே பொண்ணு பொறந்துடுச்சுன்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன்...”

”டேய் நீ ராஜா டா...”

”என்ன சொல்ற...?”

”ஆமான்டா... பொண்ண பெத்தவன் ராஜாடா... வேணும்னா இன்னொரு பொண்ண பெத்துக்கோ ராஜாதி ராஜாவாயிடுவே.”

”நீ புள்ளய பெத்துட்டு என்ன கிண்டல் பண்றீயா...?”

”கிண்டல் பண்ணலடா... உண்மையத் தான் சொல்றேன்... புள்ளைய பெத்த அப்பா, அம்மா ஏர்போர்ட் வரைக்கும் தான்... ஆனா பொண்ண பெத்த அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா, லண்டன்னு Foreign லாம் போலாம்...”

”குழப்புறீயே...”

”ஒரு பேச்சுக்கு எடுத்துக்குவோம், என் பையனுக்கு இப்ப அஞ்சு வயசு ஆகுது... அவனை இஞ்சினீரிங் படிக்க வைக்கீறேன்னு வச்சுக்குவோம்... இஞ்சினீரிங் படிச்சிட்டு என்ன பண்ணுவான்... MS படிக்க அமெரிக்கா பொறேன்னு சொல்லுவான் நானும் என் சேமிப்பெல்லம் சுரண்டி MS படிக்க அமெரிக்கா அனுப்பி வைப்பேன்... போய்ட்டு திரும்பி இங்க வருவானா... வரமாட்டான்....அங்கேயே ஒரு வேலைய பாத்து செட்டில் ஆயிடுவான். சரி கழுதை எங்கே இருந்தாலும் நல்லா இருந்தா சரின்னு.... உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்...”

”அட இப்பத் தான் குழைந்தை பொறந்திருக்கு அதுக்குள்ள சம்மந்தி ஆக்கிட்டியே...”

”டேய்... நீயோ என் பக்கத்து வீட்டுக்காரன், என் சினேகிதன் வேற... என் பையன் அமெரிக்கால செட்டில் ஆயிட்டான்னா விட்டுறுவியா... விட்டுட்டேன்னு வை நீயும் வேஸ்ட் உன் பொண்ணும் வேஸ்ட். என்ன சொல்லிட்டிருந்தேன்.... ம்... கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்... இப்ப உம் பொண்ணு ஈஸியா அமெரிக்கா போயிடுவா... அப்ப வழியனுப்ப நாம எல்லாம் ஏர்போர்ட் போறமே அவ்வளவு தான் எங்களுக்கு. போறவ சும்மா இருப்பாளா...? மூனு மாசம் கழிச்சு நான் மாசமா இருக்கேன் துணைக்கு அம்மாவை இங்க அனுப்பி வையுங்கோன்னு... உன் பொண்டாட்டிய அமெரிக்கா வரச் சொல்லுவா... மாமியார அனுப்பி வையுங்கோன்னு... என் பொண்டாட்டிய வர சொல்லுவாளா என்ன...?”

”டேய் என்னடா சொல்றே...”

”நடக்குறத தான்டா சொல்றேன்...உன் wife ம் ஜம்முன்னு அமெரிக்கா போயிடுவாங்க. இப்ப குழந்தை பொற்ந்திடுச்சின்னு வச்சிக்குவோம். என் பையன் என்ன பண்ணுவான்... குழந்தையோட போட்டாவை எங்களுக்கு அனுப்பிட்டு, அத்தையால தனியா பாத்துக்க முடியல மாமாவை இங்க வர சொல்லுங்கன்னு சொல்லுவான்... உன் பொண்டாட்டிய விட்டுட்டு தனியா இருக்க முடியாம உன் பொண்ணு மூலமா இந்த மாதிரி டகால்ட்டி வேலை செய்யாமலா இருப்பே. So இப்ப நீயும் அமெரிக்கா கிளம்பி போயிடுவே... அங்க போய் ஜீன்ஸ், ஜெர்கின்னு போட்டுட்டு கலக்குவே. நாங்க இங்க இருந்துட்டு எந்த முதியோர் இல்லம் வசதியா இருக்கும்னு பேப்பர பார்த்துட்டு இருப்போம். இப்ப புரிஞ்சுதா... பொண்ண பெத்துட்டோம்னு கவலை படாம சந்தோஷமா இரு. கவலைப்பட வேண்டியது புள்ளய பெத்தவஙக தான்.”

”யப்பா... சத்தியமா என் பொண்ண உன் புள்ளைக்கு கட்டி கொடுக்க மாட்டேன்டா.”